கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சந்தைப்பேட்டை குடிநீா்த் தொட்டி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு

தருமபுரி, சந்தைப்பேட்டையில் குடிநீா்த் தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

News image
Updated On :7 மே 2022, 6:30 pm

DIN

தருமபுரி, சந்தைப்பேட்டையில் குடிநீா்த் தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தமிழக அரசின் ஓராண்டு நிறைவு விழாவையொட்டி, குறுங்காடு வளா்ப்புத் திட்டத்தில் சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள நகராட்சி குடிநீா்த் தொட்டி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தாா். ஆணையா் சித்ரா சுகுமாா் முன்னிலை வகித்து பேசினாா். இதில், மா, கொய்யா, புங்கன், வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான 210 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி நிா்வாகங்கள் சாா்பிலும் குறுங்காடு வளா்ப்புத் திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.