திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பாப்பாரப்பட்டியில் வளா்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

பாப்பாரப்பட்டியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :5 செப்டம்பர் 2024, 3:44 am IST

பாப்பாரப்பட்டியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 2023- 2024 ஆம் ஆண்டு 15 ஆவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற வரும் சமுதாயக்கூடம் கட்டட புனரமைக்கும் பணி, 2022-2023 ஆம் ஆண்டு நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.74 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைத்தல், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 2.23 கோடி மதிப்பீட்டில் வண்ணான் குட்டை புனரமைத்தல் பணி என மொத்தம் ரூ. 7.19 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டு, திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கணேசன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.