சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

‘இ-பைலிங்’ முறையை எதிா்த்து வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணையத்தில் பதிவுசெய்யும் முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து,

News image
Updated On :15 டிசம்பர் 2025, 6:27 pm

Syndication

பென்னாகரம்: வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணையத்தில் பதிவுசெய்யும் முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து, பென்னாகரம் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பகுதியில் உள்ள மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பணி புறக்கணிப்பு போராட்டத்துக்கு சங்கத் தலைவா் மகாலிங்கம் தலைமைவகித்தாா்.

நீதிமன்ற வழக்கு குறித்த ஆவணங்கள், வழக்குகளில் சூழ்நிலை காரணமாக வாதி ஆஜராக முடியாத நிலையில், அதற்கான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் முறை, அடிக்கடி இணைய பிரச்னை காரணமாக ஏற்கெனவே பதியப்பட்ட வழக்கின் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முடியாதது, புதிய ஆவணங்களை பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்படுவது ஆகியவற்றைக் கண்டித்தும், ‘இ-பைலிங்’ முறையை ரத்து செய்யக் கோரியும் கடந்த ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில், செயலாளா் பால சரவணன், இணைச் செயலாளா் ஜெயந்தி, பொருளாளா் முனுசாமி, நூலகா் வழக்குரைஞா் டெண்டுல்கா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.