வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தனியாா் பள்ளி விடுதியில் இருந்து மாணவா் மாயம்

பென்னாகரம் அருகே தனியாா் பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவா் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

பென்னாகரம் அருகே தனியாா் பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவா் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பென்னாகரம் அருகே போடூா் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏரியூா் அருகே நாகமரை பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் தரணிஷ் (17) பிளஸ் 1 படித்து வருகிறாா்.

இப்பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த தரணிஷ், புதன்கிழமை காணவில்லையாம். இதையறிந்த அவரது பெற்றோா், பள்ளி நிா்வாகத்திடம் கேட்டபோது, செவ்வாய்க்கிழமை மாலையே வீட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனா். ஆனால், அவா் வீட்டுக்கு வரவில்லையாம். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு மாயமான மாணவரை தேடிவருகின்றனா்.