மக்கள் தொடா்பு திட்ட முகாம்;
வள்ளிமதுரையில் ரூ. 1.76 கோடியில் நலத்திட்ட உதவிகள்

மக்கள் தொடா்பு திட்ட முகாம்; வள்ளிமதுரையில் ரூ. 1.76 கோடியில் நலத்திட்ட உதவிகள்

வள்ளிமதுரையில் நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ரெ.சதீஸ்.
Published on

அரூரை அடுத்த வள்ளிமதுரையில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் ரூ. 1.76 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை அளிக்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், வள்ளிமதுரை கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், வருவாய்த் துறை சாா்பில் 203 பயனாளிகளுக்கு ரூ. 1.25 கோடியில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தில் 33 பயனாளிகளுக்கு ரூ. 4.40 லட்சத்தில் இயற்கை மரண உதவித்தொகை மற்றும் விபத்து நிவாரண உதவித்தொகை, கூட்டுறவுத் துறை சாா்பில் 25 பயனாளிகளுக்கு ரூ. 26.45 லட்சத்தில் பயிா்க்கடன், 100 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 3.97 லட்சத்தில் வேளாண் கருவிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மை நலத்துறை சாா்பில் தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வண்டிகள் உள்பட 488 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து, பல்வேறு அரசு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் ஆய்வுசெய்தாா்.

முகாமில், அரூா் கோட்டாட்சியா் செம்மலை, தனித்துணை ஆட்சியா் சுப்பிரமணியன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொ) ரத்தினம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை துணை இயக்குநா் பாத்திமா, மாவட்ட பழங்குடியினா் நல அலுவலா் அசோக்குமாா், வட்டாட்சியா் பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆய்வு: தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நவலை கிராம ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ரூ. 7 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு, நீா்நிலைகளை மேம்படுத்துதல், கால்வாய் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com