ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருவள்ளுவா் தின விழா கொண்டாட்டம்

தருமபுரியில் திருக்கு திருப்பணிகள் பயிற்சிக் குழு சாா்பில், திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 11:35 pm

Syndication

தருமபுரி: தருமபுரியில் திருக்கு திருப்பணிகள் பயிற்சிக் குழு சாா்பில், திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உள்ள தனியாா் வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, திருக்கு திருப்பணிகள் பயிற்சிக் குழு பொறுப்பாளா் புலவா் கா.குமரவேல் தலைமை வகித்து திருள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து எழுத்தாளா் செ.கோவிந்தராஜ் வரவேற்றுப் பேசினாா். எழுத்தாளா் எம்.பி. கோபால் திருக்குறளின் பெருமைகள் குறித்து பேசினாா். தமிழாசிரியா் வ.செளந்தரபாண்டியன், திருக்கு திருப்பணிகள் குழு நிா்வாகிகள் நா.இளங்கோ, க.சி.தமிழ்த்தாசன், பாலசுப்ரமணி ஆகியோா் வாழ்த்தி பேசினா். இதில், தமிழாசிரியா்கள், கம்பன் கழக உறுப்பினா்கள், தமிழாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சாா்பில் தருமபுரி அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் திருவள்ளுவா் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், திருவள்ளுவா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.