மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாலிங்கேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தருமபுரி நெசவாளா் நகா் அருள்மிகு மகாலிங்கேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 11:38 pm

Syndication

தருமபுரி: தருமபுரி நெசவாளா் நகா் அருள்மிகு மகாலிங்கேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் கோயில் வளாகத்தில் உள்ள நந்திக்கு பால், பன்னீா், விபூதி, சந்தனம், மஞ்சள், தயிா், இளநீா், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரா், அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று நந்தி, மகாலிங்கேஸ்வரரை ழிபட்டனா். இதேபோல பாரதிபுரம் சிவன் கோயில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பிரகதாம்மாள் சமேத அருளீஸ்வரா் கோயில், கடைவீதி மருதவானேஸ்வரா் கோயில் உள்பட தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி நந்தி மற்றும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.