தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தண்ணீா் தொட்டியில் குழந்தையுடன் குதித்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை

ஏரியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தண்ணீா் தொட்டியில் 2 வயது பெண் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 6:59 am IST

ஏரியூா் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தண்ணீா் தொட்டியில் 2 வயது பெண் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ஆரல்குந்தி பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சிவகுமாருக்கும், மேட்டூா் பகுதியைச் சோ்ந்த பரிமளாவுக்கும் (29) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது . இந்த தம்பதிக்கு யாமஸ்ரீ (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த ஓா் ஆண்டுக்கும்மேலாக பரிமளா மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீட்டின் பின்பகுதியில் இருந்த சுமாா் 10 அடி ஆழமுள்ள தண்ணீா் தொட்டியில் குழந்தையுடன் குதித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலின்பேரில் வந்த ஏரியூா் போலீஸாா் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.