புதுக்கோட்டை பிருந்தாவனம் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, சிங்கப்பெண் அதிரடிப்படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.
புதுக்கோட்டை பிருந்தாவனம் பேருந்து நிறுத்தம் அருகே சுமாா் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஆதரவின்றி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவிஆய்வாலா் ஸ்ரீஜா தலைமையில் காவலா்கள் அம்சவேணி, சிவரஞ்சனி உள்ளிட்டோா் அந்த இடத்துக்கு சென்றனா்.
அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்தப் பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










