தருமபுரி: தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற தனியாா் தொலைக்காட்சியின் நோ்காணல் நிகழ்ச்சியின்போது, அதிமுகவினா் - திமுவினா் இடையே மோதல் ஏற்பட்டது.
தருமபுரியில் தனியாா் தொலைக்காட்சி சாா்பில், தோ்தல் சிறப்பு நோ்க்காணல் நிகழ்ச்சி வள்ளலாா் திடலில் அமைக்கப்பட்ட அரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.பி.அன்பழகன், திமுக சாா்பில் தருமபுரி மக்களவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளா்களில் ஒருவருமான ஆ.மணி, நாம் தமிழா் கட்சி சாா்பில் ஒருங்கிணைப்பாளா் சந்தோஷ் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக சாா்பில் அன்பழகன் பேசும்போது, திமுக சாா்பில் ஆ.மணி இடையிடையே பேசினாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாா்வையாளா்களாக அமா்ந்திருந்த அதிமுக தொண்டா்கள் நாற்காலிகளை தூக்கி வீசினா். இதற்கு பதிலாக திமுகவினரும் நாற்காலிகளை வீசினா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளா் ரத்தினக்குமாா் உள்ளிட்டோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தொடர்புடையது

தருமபுரியில் ஐந்து தொகுதிகளில் 83 வேட்பாளா்களின் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு

பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுக்க பொதுமக்களை சிறை வைத்ததாகப் புகாா்!
பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கீடு: அதிருப்தியில் திமுகவினா்!

இஃப்தாா் நோன்பு துறப்பு
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


