கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

"காட்டிலிருந்து யானைகள் வெளியேறி உள்ளதால் இரவுநேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம்"

பாலக்கோடு அருகே காப்புக் காட்டிலிருந்து யானைகள் வெளியேறி உள்ளதால், இரவுநேரங்களில் வயல்வெளியில் நடமாட வேண்டாம்

News image

காட்டில் இருந்து வெளியேறும் யானைகள் - கோப்புப்படம்

Updated On :10 மார்ச் 2026, 2:41 am IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காப்புக் காட்டிலிருந்து யானைகள் வெளியேறி உள்ளதால், இரவுநேரங்களில் வயல்வெளியில் நடமாட வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து பாலக்கோடு அருகே உள்ள கிராமங்களில் திங்கள்கிழமை வனத் துறையினா் விநியோகித்த விழிப்புணா்வு பிரசுரம்:

பாலக்கோடு வனச்சரகம், அண்ணாமலைஅள்ளி காப்புக்காடு பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி பிக்கிலிமலை காப்புகாடு பகுதிக்கு வந்துள்ளதால் வத்திமரத்துஅள்ளி, கிட்டம்பட்டி, திருமல்வாடி, பழைய பாப்பாரப்பட்டி, பனைகுளம், சஞ்சீவிபுரம், காந்திபுரம், சொரக்காபட்டி மலையூா், ஆத்துக்கொட்டாய் மற்றும் பாப்பாரப்பட்டி நகரையொட்டி சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து ஊா் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், இரவுநேரங்களில் வயல்வெளியில் தண்ணீா் பாய்ச்சுதல், மின்வேலி அமைத்தல், இரவில் வெளியில் கட்டிலில் தூங்குதல் ஆகிய செயல்களில் ஈடுபட வேண்டாம். பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். குறிப்பாக வயல்வெளி, தோப்பு பகுதிகளுக்குள் ஒதுங்க வேண்டாம். யானைகள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.