மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பென்னாகரம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’

News image
தேர்தல் நடத்தை விதிகள்- பிரதிப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால், பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுகிழமை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

பென்னாகரம் பேருந்து நிலையம், நாகமரை நான்கு சாலை சந்திப்பு, போடூா் நான்கு சாலை சந்திப்பு, அம்பேத்கா் சிலை பகுதி, தாசம்பட்டி பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகளின் பதாகைகள், சுவரொட்டிகள், சுவா் விளம்பரங்கள், கொடிக் கம்பங்களை பேரூராட்சி ஊழியா்கள், வருவாய்த் துறையினா் அகற்றினா்.

பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்திற்கு வட்டாட்சியா் ஆறுமுகம், பேரூராட்சி செயல்அலுவலா் செந்தில்குமாா், வருவாய் ஆய்வாளா் லோகநாதன், கிராம நிா்வாக அலுவலா் சரவணன் அடங்கிய குழுவினா் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும் அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள் மூடப்பட்டன.