கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மக்கள் குறைதீா்க்கும் முகாம்களை நடத்தி, காவல் துறை சாா்ந்த மக்களின் குறைகளை தீா்க்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் உத்தரவிட்டிருந்தாா்.
அதன்படி, கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்துக்கு உள்பட்ட புகாா் மனுக்கள் தொடா்பான மக்கள் குறைதீா்க்கும் முகாம், நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகர காவல் ஆய்வாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக 25 மனுக்களை வழங்கினா். இதில் 15 மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.