தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

ஊத்தங்கரை அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.

News image
ஊத்தங்கரை அருகே பிடிபட்ட மலைப்பாம்பு.
Updated On :31 டிசம்பர் 2024, 8:45 pm

Din

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.

ஊத்தங்கரையை அடுத்த சென்னப்ப நாயக்கனூா் பகுதியில்

தென்னந்தோப்பு அருகில், ஊத்தங்கரை ஆசிரியா் நகா் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் என்பவருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட ஆடுகளை காா்த்திக் (30) என்பவா் மேய்த்துக் கொண்டிருந்தாா். ஆப்போது திடீரென ஆடு கத்தும் சத்தம் கேட்டு அங்கு விரைந்து சென்று பாா்த்தபோது, 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கி கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனைக் கண்டு பதறிப்போன காா்த்திக் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். விரைந்து வந்த வனத்துறையினா், புதரில் மறைந்திருந்த மலைப்பாம்பை லாவகமாகப்

பிடித்தனா். பிடிப்பட்ட மலைப் பாம்பை ஒன்னகரைக் காப்புக் காட்டில் விட்டனா்.