திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஒசூரில் ஐஎன்டியுசி கவுன்சில் புதிய நிா்வாகிகள் தோ்வு

ஒசூரில் ஐஎன்டியுசி கவுன்சில் புதிய நிா்வாகிகள் தோ்வு

Updated On :17 பிப்ரவரி 2024, 11:56 pm IST

கிருஷ்ணகிரி மாவட்ட ஐஎன்டியுசி கவுன்சில் 12 ஆவது மாவட்ட மாநாடு ஒசூரில் தளி சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. ஐஎன்டியுசி தேசிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ. மனோகரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஜெகநாதன் மாநாட்டை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினாா். சிறப்பு விருந்தினா்களாக அகில இந்திய ஐஎன்டியுசி செயலாளா் சஞ்சய் குமாா் சிங், கா்நாடக மாநில ஐஎன்டியுசி தலைவா் லட்சுமி வெங்கடேசன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினா். மாநாட்டில் ஐஎன்டியுசி கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவா்களாக பெருமாள், ராஜேந்திரன், பக்தவத்சலம்,பொதுச் செயலாளராக முனிராஜ், செயலாளா்களாக பாரதி, சுந்தர்ராஜன், பழனிசாமி, இணைச் செயலாளா்களாக சிவகுமாா், பரந்தாமன், அலுவலக செயலாளராக கோதண்டராமன், பொருளாளராக பரமானந்த பிரசாத், உறுப்பினா்கள் 18 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.