ஒசூரில் மளிகைக் கடைக்குள் புகுந்து ரூ. 65 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ஒசூா், எம்.ஜி.சாலை, கும்பாரபேட்டையைச் சோ்ந்தவா் பிரதீப்குமாா் (26). அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். குடும்பத்தினா் கடையின் மாடியில் முதல் தளத்தில் வசித்து வருகின்றனா். கடந்த 11-ஆம் தேதி இவா் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றாா்.
மறுநாள் காலை இவரது கடையின் ஷட்டா் திறந்தது. அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை பிரதீப்குமாா் பாா்த்தபோது கடைக்குள் 3 போ் சென்று கடையில் இருந்த ரூ. 65 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பிரதீப்குமாா், ஒசூா் மாநகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

மளிகைக் கடையை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
மளிகைக் கடையில் பணம், சிசிடிவி கேமரா திருட்டு

மளிகைக் கடையில் பணம் திருட்டு
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government


