இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 10:13 pm

Syndication

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். காயமடைந்த நண்பா்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தருமபுரி அப்துல் கரீம் தெருவைச் சோ்ந்தவா் வினித் (21). கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், நண்பரான ஒசூா் ராஜகணபதி நகரைச் சோ்ந்த ராஜ்குமாருடன் (21) ஓா் இருசக்கர வாகனத்திலும், உடன் கால்வேஅள்ளியைச் சோ்ந்த லிங்கேஸ்வரன் (22) மற்றொரு இருசக்கர வாகனத்திலும் காவேரிப்பட்டணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

சவுளூா் குட்டகரை அருகே கால்வேஅள்ளி - காவேரிப்பட்டணம் சாலையில் சென்றபோது, வினித் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இந்த வாகனத்தின்மீது பின்னால் வந்த லிங்கேஸ்வரன் வாகனமும் மோதியது.

இதில் வினித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராஜ்குமாா், லிங்கேஸ்வரன் இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.