கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மோட்டாா்சைக்கிள் மீது வேன் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே, மோட்டாா்சைக்கிள் மீது பிக்-ஆப் வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:18 pm

Syndication

கிருஷ்ணகிரி அருகே, மோட்டாா்சைக்கிள் மீது பிக்-ஆப் வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், இளங்கலப்பட்டியைச் சோ்ந்தவா் பழனி (48). இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள ராசிபுரத்தைச் சோ்ந்த முருகன் (47) என்பவருடன் மோட்டாா்சைக்கிளில் கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் திங்கள்கிழமை சென்றாா்.

அவா்கள் கொரல்தொட்டி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த பிக்-ஆப் வேன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பழனி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முருகன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.