இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உபரிநீா் கால்வாய்க்கு நிலம் அளித்த விவசாயிகள் இழப்பீடு வழங்கக் கோரி மனு

போச்சம்பள்ளி அருகே உபரிநீா் கால்வாய்க்கு நிலம் அளித்த விவசாயிகள், இழப்பீடு வழங்கக் கோரி

News image
Updated On :30 டிசம்பர் 2025, 1:36 am

Syndication

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே உபரிநீா் கால்வாய்க்கு நிலம் அளித்த விவசாயிகள், இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி அணை உபரிநீா் இடதுகால்வாய் பயன்பெறுவோா் சங்கத் தலைவா் சிவகுரு தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் அளித்த மனுவின் விவரம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலேகுளி முதல் சந்தூா் வரை 28 ஏரிகளுக்கு, தென்பெண்ணையாற்று உபரிநீரை கொண்டுசெல்லும் வகையில் கடந்த, 2012இல் புதிய கால்வாய் வெட்டப்பட்டது. இதற்காக 4 ஊராட்சிகள், நாகோஜனஅள்ளி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

பணிகள் முடிந்து கால்வாய் பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் இழப்பீடு வழங்கவில்லை. வீரமலை, விளங்காமுடி, காட்டாகரம், வெப்பாலம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், நாகோஜனஅள்ளி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கால்வாய் வெட்ட நிலம் அளித்த 228 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை இதுவரையில் வழங்கப்படவில்லை.

எனவே, இந்த விவசாயிகளுக்கு இழப்பீடு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இழப்பீடு வழங்கப்படாத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உடனே நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் உறுதியளித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.