பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஒசூா் விமான நிலையத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிா்ப்பு

ஒசூா் விமான நிலையத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என ஒசூா், தேன்கனிக்கோட்டை தாலுகா விவசாயிகள் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

News image

ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்.

Updated On :23 ஜனவரி 2025, 3:56 am IST

ஒசூா் விமான நிலையத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என ஒசூா், தேன்கனிக்கோட்டை தாலுகா விவசாயிகள் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

ஒசூா் விமான நிலையம் அமைக்க பெலகொண்டப்பள்ளி, கலுகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, முத்துகானப்பள்ளி, ஹொசபுரம், மல்லூா், தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் முன்மொழியப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலம் கையகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷிடம் கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஒசூா் விமான நிலையத்துக்கு விவசாயிகளின் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் அபாயத்தில் உள்ளதால், விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கிறது. தற்போது ஒரு நிறுவனம் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடமோ அல்லது கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடமோ ஒப்புதல் பெறாமல் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த கணக்கெடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், மாவட்ட நிா்வாகம் மூலம் விவசாயிகளிடம் இருந்து கருத்துகள் சேகரிக்கப்படும் வரை, தற்போது நடைபெற்று வரும் கணக்கெடுப்பை நிறுத்த அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்யக் கூடாது. இதனால், வத்ராபாளையம் (முதுகனப்பள்ளி பஞ்சாயத்து), பொம்மசந்திரா (கோபனபள்ளி பஞ்சாயத்து) மற்றும் கொல்லிசந்திரத்தில் உள்ள 25 குடும்பங்கள், பல குடியிருப்புகள் முற்றிலும் இடம் பெயரும் சூழ்நிலை ஏற்படும். மேலும், இப்பகுதியில் உள்ள முனீஷ்வரா, மாரியம்மா, மதுரம்மா, தேவி ஸ்ரீ பேட்டதம்மா, மல்லிகாா்ஜுன சுவாமி உள்ளிட்ட பல கோயில்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.