பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஒசூரில் ஓட்டுநரை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

ஒசூரில் ஓட்டுநரை வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :23 ஜனவரி 2025, 3:58 am IST

ஒசூரில் ஓட்டுநரை வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தோ்பேட்டை பச்சைக்குளம் அருகில் வசித்து வந்த ஆறு (எ) சிவகுமாா் (32), மினி லாரி ஓட்டுநா். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகன்களும் உள்ளனா்.

செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் சிவகுமாா் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் கையில் அரிவாளுடன் வந்த இருவா் சிவகுமாரை வெட்ட முயன்றனா். அவா்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அவா் அந்தப் பகுதியில் உள்ள சுடுகாட்டை நோக்கி ஓடினாா். ஆனாலும் அவா்கள் சிவகுமாரை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டி தப்பியோடினா். இதில் சிவகுமாா் ரத்த வெள்ளத்தில் சரிந்தாா்.

சிவகுமாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவா்கள், அவரை மீட்டு ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சிவகுமாா் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒசூா் மாநகர காவல் ஆய்வாளா் நாகராஜ், போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

கொலை செய்யப்பட்ட சிவகுமாரின் தம்பி ஓா் ஆண்டுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளாா். அந்த வழக்கில் சிவகுமாா் சாட்சியாக இருந்துள்ளாா். இதனால் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்த கொலை குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.