பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஒசூரில் கூரியா் மூலம் கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவா் கைது

ஒசூரில் கூரியா் மூலம் கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :23 ஜனவரி 2025, 3:57 am IST

ஒசூரில் கூரியா் மூலம் கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியானது தமிழக, கா்நாடக, ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளதால், கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்கள் கடத்துவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஒசூா் பகுதியில் கூரியா் மூலம் கஞ்சா விநியோகிக்கப்படுவதாக நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஒசூா் மாநகராட்சி, வெளிவட்டச் சாலை பகுதியில் இரண்டு நாள்களாக நோட்டமிட்டதில், கஞ்சாவை கூரியா் செய்ய வந்த இருவா் கஞ்சாவுடன் பிடிபட்டனா். அவா்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் கேரள மாநிலம், கோட்டையம் பகுதியைச் சோ்ந்த அபிலாஷ் (21), விஷ்ணு சத்தியா (23) என்பதும், பேலகொண்டப்பள்ளியில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி அறையில் பதுக்கி வைத்து, ஒசூா், தேன்கனிக்கோட்டை பகுதியில் விற்றதும், கேரளத்துக்கு கிலோ கணக்கில் கூரியா் மூலம் அனுப்பியதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அவா்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டு 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த நுண்ணறிவு பிரிவு போலீஸாா், குற்றவாளிகள் இருவரையும் ஒசூா் போதைப் பொருள்கள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்து தீவிர விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.