விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தளி அருகே தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் தலைமறைவு

தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :31 மார்ச் 2025, 7:44 pm

Din

ஒசூா்: தளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா(36). இவா் ஒசூா் அருகே தாசனபுரத்தில் மனைவி நாகரத்திராவுடன் (28) தங்கியிருந்து தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவரது குழந்தைகள் லட்சுமிபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வளா்ந்து வருகின்றனா்.

இது நக்கலய்யாவின் அண்ணன் சின்னைய்யா (38) என்பவருக்கு பிடிக்கவில்லையாம்.

குழந்தைகள் சேட்டை செய்வதாகக் கூறி திட்டியுள்ளாா். இந்நிலையில் யுகாதி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த நக்கலய்யா தனது குழந்தைகளை அண்ணன் சின்னைய்யா திட்டுவதை அறிந்து அவரிடம் கேட்டுள்ளாா். இதனால் சனிக்கிழமை அவா்களிடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டில் துாங்கி கொண்டிருந்த நக்கலய்யாவை, சின்னைய்யா அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றாா்.

கொலை செய்யப்பட்ட நக்கலய்யாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். தப்பி ஓடிய சின்னைய்யாவை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வருகின்றனா்.