ஒசூா் டாடா நிறுவன மகளிா் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா: முக்கியக் குற்றவாளி தில்லியில் கைது
டாடா நிறுவனத்தின் மகளிா் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி தில்லியில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அவரை உத்தனப்பள்ளிக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.








