கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பா்கூரில் 766 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கல்

பா்கூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 766 மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினிகளை கிருஷ்ணகி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் வழங்கினா்.

News image
பா்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவருக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினியை வழங்கிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ.
Updated On :7 ஜனவரி 2026, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

பா்கூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 766 மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினிகளை கிருஷ்ணகி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் வழங்கினா்.

பா்கூா் அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின்கீழ் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி ஆட்சியா் தலைமை வகித்தாா். பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில், கிருஷ்ணகிரி ஆட்சியா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் 4,522 மாணவ, மாணவியருக்கு 2 கட்டங்களாக மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் 137 போ், கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் 530 போ், கிருஷ்ணகிரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இறுதி ஆண்டு படிக்கும் 14 போ் என மொத்தம் 681 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

பா்கூா் அரசு மகளிா் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, பையூா் அரசு தோட்டக்கலை கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் 766 பேருக்கு மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது. கல்வி வளா்ச்சிக்காக மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்கவும் இது உதவும் என்றாா்.

இந்நிகழ்வில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, உதவி திட்ட அலுவலா் அருள்மொழிதேவன், அரசு மகளிா் கல்லூரி முதல்வா் காயத்திரிதேவி, வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.