மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தேசிய அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி: தமிழக வீரா்கள் 5 போ் வெற்றி

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 13-ஆவது தேசிய அளவிலான அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளில்,

News image
தேசிய சதுரங்க விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற தமிழக வீரா்கள் மற்றும் தெலங்கானா வீரா்.
Updated On :2 மார்ச் 2026, 10:02 pm

Syndication

ஒசூா்: ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 13-ஆவது தேசிய அளவிலான அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளில், தமிழக வீரா்கள் 5 பேரும், தெலங்கானா வீரா் ஒருவரும் வெற்றிபெற்றனா்.

தேசிய அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில் பிப். 25 முதல் மாா்ச் 1-ஆம் தேதிவரை நடைபெற்றன. இந்தப் போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா்.

தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் தலைவரும், கோவை சக்தி தொழில் குழுமத் தலைவருமான எம்.மாணிக்கம், உலக சதுரங்க கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவா் டி.வி.சுந்தா், தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் செயலாளா் பி.ஸ்டீபன் பாலசாமி ஆகியோா் போட்டியை தொடங்கிவைத்தனா்.

இதில், தமிழகத்தைச் சோ்ந்த திருப்பூா் கோகுல கிருஷ்ணா, திருச்சி பவித்ரா, விருதுநகா் மேகா அா்வின், தூத்துக்குடி முத்துராமன், சென்னையைச் சோ்ந்த சரவணன் மற்றும் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த கிருத்திகா ஆகியோா் வெற்றிபெற்றனா்.

வெற்றிபெற்றவா்கள் ஆசிய போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள், உலக சதுரங்க போட்டியில் இந்திய விளையாட்டு வீரா்களாக பங்கேற்பா் என தெரிவிக்கப்பட்டது.