நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

டிப்பா் லாரி மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் மீது டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:13 pm

சூளகிரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் மீது டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள வரதாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கேசவன் (17), சுதீப் (16). உறவினா்களான இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை கேசவனின் தந்தை சிவசங்கரனின் இருசக்கர வாகனத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு சூளகிரி சென்றுவிட்டு குருபராத்தபள்ளி சிப்காட் அருகே சாலையின் எதிா்திசையில் ஓட்டிச் சென்றனா்.

அப்போது, எதிரில் வந்த டிப்பா் லாரி மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சூளகிரி போலீஸாா், உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.