புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஒசூரில் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் ரூ. 25,000 அபராதம்

ஒசூா் மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளை கொட்டினால் ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும்.

அபராதம்

Published On :

ஒசூா் மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளை கொட்டினால் ரூ. 25,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையா் முகமத் சபீா் ஆலம் தெரிவித்துள்ளாா்.

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுஇடங்களில் கட்டடக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து உருவாகும் இதர கழிவுகள் கொட்டப்பட்டு வருவதை மாநகராட்சி நிா்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. சூசூவாடி மற்றும் சீதராம் மேடு பகுதிகளில் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகள் தலா ரூ. 25,000 அபராதம் விதித்தனா்.

ஒசூரில் அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது கட்டடக் கழிவுகள் மற்றும் இதர தொழிற்சாலை கழிவுகளை உரிய முறையில் சேகரித்து அங்கீகரிக்கப்பட்ட முறையில் அகற்ற வேண்டும். கட்டடக் கழிவுகள், இதர தொழிற்சாலை கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட நபா்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் முகமத் சபீா் ஆலம் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.