கபிலர்மலை அருகே பெரியமருதூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.குன்னத்தூர் ஊராட்சிக்குள்பட்ட பெரியமருதூரில், கடந்த இரு தினங்களுக்கு முன் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் அப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதன்கிழமை திடீரென டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தாற்காலிகமாக டாஸ்மாக் கடை மூடப்படும் எனவும், மாவட்ட நிர்வாகத்திடம் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மனு அளிக்குமாறும் போலீஸார் தெரிவித்தனர். அதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!

உலகக் கோப்பையின் முதல் திருட்டு: ஹைதி தோல்விக்கு ஃபிஃபாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


