சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

கபிலர்மலையில் டாஸ்மாக் கடை முற்றுகை

கபிலர்மலை அருகே பெரியமருதூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:15 am IST

கபிலர்மலை அருகே பெரியமருதூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.குன்னத்தூர் ஊராட்சிக்குள்பட்ட பெரியமருதூரில், கடந்த இரு தினங்களுக்கு முன் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் அப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதன்கிழமை திடீரென டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தாற்காலிகமாக டாஸ்மாக் கடை மூடப்படும் எனவும், மாவட்ட நிர்வாகத்திடம் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மனு அளிக்குமாறும் போலீஸார் தெரிவித்தனர். அதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.