8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

காமராஜர் பள்ளியில் மாணவர்களுக்கு தினமணி நாளிதழ், மரக்கன்றுகள் அளிப்பு

பள்ளி மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை விளக்கும் வகையிலும் நாமக்கல்

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

பள்ளி மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை விளக்கும் வகையிலும் நாமக்கல் எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து தினமணி,  நாமக்கல் காமராஜர் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் பொம்மைக்குட்டைமேடு காமராஜர் கல்வி நிறுவன வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்வி நிறுவனத் தலைவர் ஆர்.நல்லதம்பி தலைமை வகித்தார்.  செயலர் எஸ்.சதாசிவம்,  பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.காளியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் எம்.விஜயகுமார்,  தினமணி தருமபுரி பதிப்பு மேலாளர் டி.கதிரவன்,  ரோட்டரி சங்க நிர்வாகிகள் அருள், தினேஷ் ஆகியோர் பேசினர்.  நிகழ்வில், பள்ளியில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு தினமணி நாளிதழ் ஒரு பிரதி மற்றும் ஒரு மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது.
நாளிதழ் வாசிப்புப் பழக்கம் அன்றாட நிகழ்வுகளையும்,  வெளி உலகத்தையும்  அறிந்து கொள்ளவும், அதன் மூலம் அறிவு வளர்ச்சி பெறவும் உதவும்.  எதிர்காலத்தில் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்வதில் நாளிதழ்களின் பங்கு மிகவும் முக்கியமானது. 
மரக்கன்றுகள் வளர்ப்பு என்பது சமுதாயப் பணி,  மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை வளர்த்தாலே, தமிழகத்தை பசுமையான மாநிலமாக உருவாக்க முடியும்.  மாணவர் சமுதாயம் முன்னெடுக்கும் விஷயங்கள் எப்போதும் கூடுதல் கவனத்தைப் பெறும்.   அந்த வகையில், மரக்கன்றுகள் வளர்ப்பில் மாணவர்களின் ஈடுபாடு அதிகரிக்க வேண்டும் என நிகழ்வில் பேசியவர்கள் வலியுறுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் செயலர் அருண்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.