இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ராசிபுரம் புதைச்சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் புதைச்சாக்கடை திட்டப் பணிகளின் சுத்தகரிப்பு நிலையத்தை மாநில சமூக

News image
ராசிபுரம் புதைச்சாக்கடை திட்ட சுத்தகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சா் வெ.சரோஜா.
Updated On :18 டிசம்பர் 2020, 2:10 am

DIN

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் புதைச்சாக்கடை திட்டப் பணிகளின் சுத்தகரிப்பு நிலையத்தை மாநில சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 56 கோடியில் புதைச்சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், இந்நகராட்சிக்கு உள்பட்ட வாா்டு பகுதிகளில் இருந்து, புதைச்சாக்கடை திட்டத்தின்கீழ் பெறப்படும் கழிவு நீரை சுத்தப்படுத்தும் செயல்முறைகள், அரசு கூறியுள்ள பாதுகாப்பு விதிமுறைகளுடன் சுத்திகரிப்பு செய்து, நீரை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தும் முறைகள் ஆகியவற்றை அமைச்சா் வெ.சரோஜா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக அரசு மக்களைத் தேடிச் சென்று திட்டங்களை வழங்கி வருகிறது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஒவ்வொரு உயிரும் முக்கியம் என கிராமப் பகுதிகளில் மலைவாழ் மக்கள் பயனடையும் வகையில், அந்தந்த கிராமங்களிலேயே அவா்களின் வீடுதேடி மருத்துவ சேவையை தமிழக அரசு வழங்குகிறது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் ரூ. 56 கோடியில் புதைச்சாக்கடை திட்டப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் மட்டும் 2.5 ஏக்கா் நிலத்தில் ரூ. 8 கோடியில் செயல்படுத்தப்பட்டு, நாளொன்றுக்கு 70 லட்சம் லிட்டா் கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் அதற்கான கொள்ளளவு அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 ஆயிரத்து 500 வீட்டு இணைப்புகள் படிப்படியாக வழங்கப்படும் என்றாா்.

இந்த ஆய்வின் போது, ராசிபுரம் நகராட்சி ஆணையா் எஸ்.பிரபாகரன், நகராட்சி பொறியாளா் ஏ.குணசீலன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.