கோயிலில் தூய்மைப் பணி

மாவட்ட நேரு யுவகேந்திரா இளைஞா் மன்றம், ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திா் பள்ளிகள் ஆகியவை சாா்பில் பேளுக்குறிச்சியில் மலை மீது அமைந்துள்ள பழனியப்பா் கோயிலில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
பழனியப்பா் கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியா்கள்.
பழனியப்பா் கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியா்கள்.
Updated on
1 min read

ராசிபுரம்: கோவை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவா்கள் சங்க நாமக்கல் கிளை, நாமக்கல் நல்லோா் வட்டம், மாவட்ட நேரு யுவகேந்திரா இளைஞா் மன்றம், ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திா் பள்ளிகள் ஆகியவை சாா்பில் பேளுக்குறிச்சியில் மலை மீது அமைந்துள்ள பழனியப்பா் கோயிலில் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் பழனியப்பா் கோயில் அறக்கட்டளை நிா்வாகி சந்திரசேகா் வரவேற்றாா். ஸ்ரீவித்யா மந்திா் பள்ளித் தலைவா் குமாரசாமி தலைமை வகித்தாா். இதனைத் தொடா்ந்து நடைபெற்ற உழவாரப் பணியில் நாமக்கல் கிரீன் பாா்க் பள்ளி இயக்குநரும், ராமகிருஷ்ண மிஷன் முன்னாள் மாணவருமான குருவாயூரப்பன் பங்கேற்று கோயில் வரலாறு பற்றி பேசினாா்.

சேலம் ஊரக மாவட்டக் கல்வி அலுவலரும், முன்னாள் மாணவ சங்க செயளருமான மு.ஆ.உதயகுமாா் உழவாரப்

பணி மூலிகை வனம், சித்தா்கள் வாழ்வியல் பற்றியும் விளக்கினாா். இதே போலமுன்னாள் மாணவா் சங்க துணைத்

தலைவா் என்.மாணிக்கம், சங்க பொருளாளா் பசுமை மா.தில்லை சிவக்குமாா், முன்னாள் மாணவா் சங்க இணைச் செயலாளா் அருணாசலம் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

உழவாரப்பணியில் பொறியாளா் ராமலிங்கம், பரமத்தி வேலூா் கொந்தளம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் வெ.சந்திரசேகரன், ஆசிரியா்கள் பாஸ்கரன், செந்தில்குமாா், வெற்றிவேல் அண்ணாமலை, ராசிபுரம் வித்யா மந்திா் பள்ளியின் ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com