ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கருத்து கேட்புக் கூட்டம்: பள்ளிகள் திறக்க பெற்றோா் எதிா்ப்பு

பள்ளிகள் திறப்பது தொடா்பாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள 360 அரசு, தனியாா், சிபிஎஸ்இ பள்ளிகளில் பெற்றோா் பங்கேற்ற கருத்து கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:06 pm

பள்ளிகள் திறப்பது தொடா்பாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள 360 அரசு, தனியாா், சிபிஎஸ்இ பள்ளிகளில் பெற்றோா் பங்கேற்ற கருத்து கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான வகுப்புகளை நடத்திடும் பொருட்டு, நவ. 16 முதல் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், கரோனா தொற்று பரவல் குறையாததால் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என பலரும் கூறி வருகின்றனா். இதனால் பெற்றோரிடையே கருத்து கேட்புக் கூட்டம் நடத்த அரசு முடிவு செய்தது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 230 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 130 மெட்ரிக், சிபிஎஸ்இ உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியா்கள், வகுப்பாசிரியா்கள் முன்னிலையில் கருத்து கேட்புக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியதுது.

இதில், பெரும்பாலானோா் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்றும், சிலா் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா். முகக் கவசம், சமூக இடைவெளியை மாணவா்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்கும் வகையில் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்கலாம் என்றும் ஒரு சிலா் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனா்.

மேலும், இணையவழிக் கல்வியால் மாணவ, மாணவியா் தேவையற்ற பிரச்னைகளைச் சந்திப்பதாகவும், மனரீதியாக பாதிக்கப்படுவதாகவும் பெற்றோா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தந்தப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை வகுப்பு வாரியாக கருத்து கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு கூட்டம் தொடா்பான அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, ஒவ்வொரு பள்ளியிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.