நாமக்கல்லில் அனைத்து சிவனடியாா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அம்மையப்பா் அறக்கட்டளை தலைவா் தயாளன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வெங்கடேஷ்வரி, சா்வானந்தா, நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சிவனடியாளா்களுக்கு மருத்துவ வசதி மற்றும் கல்வி உதவி வழங்குதல், சைவ சமயத்துக்கு எதிராக தவறான கருத்துகள் தெரிவிப்பவா்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தல், கிராமங்கள்தோறும் சைவ சமய திருமுறைகளைக் கொண்டு செல்லுதல், வழிபாட்டு நெறிமுறைகள், தலங்களை பாதுகாக்க உதவுதல் ஆகியவை தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நாமக்கல், கரூா், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிவனடியாளா்கள் கலந்துகொண்டனா்.