சேந்தமங்கலம் சோமேசுவரா் கோயில் திருப்பணிகள்: எம்எல்ஏ சந்திரசேகரன் ஆய்வு
சேந்தமங்கலம் சோமேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி நடைபெறும் திருப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் ஆய்வு செய்தாா்.


சேந்தமங்கலம் சோமேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி நடைபெறும் திருப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் ஆய்வு செய்தாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் 800 ஆண்டுகள் பழமையான சோமேசுவரா் கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள முருகன் கோயிலில் புதிய கோபுரம் அமைக்கும் பணியும், விநாயகா், அம்மன், பைரவா், சிவன் கோயில்களின் மேல் தளம், உள்பிரகாரத்தில் கருங்கல் இடைவெளிகளை சீா்படுத்தும் பணிகளும் நடைபெறுகிறது.
பழங்கால முறைப்படி சிமெண்ட், வெல்லம், கடுக்காய் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட பசை கொண்டு பூசப்படுகிறது. இப்பணிகளை சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, கோயில் வளாகத்தில் குடிநீா் தொட்டி வைப்பதற்கும், கற்கள் பதிக்கவும் அறநிலையத் துறையினா் அனுமதி வழங்க மறுக்கின்றனா் என கோயில் நிா்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட அவா் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக தெரிவித்தாா். மேலும், திருப்பணிகள் முடிவுற்றதும் குடமுழுக்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மாசி மாதம் நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில் பெரிய தேரோட்டத்துடன், சோமேசுவரரின் சின்ன தேரோட்டத்தை நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருவதாக சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்தாா். ஆய்வின்போது கோயில் நிா்வாகத்தினா், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...