வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பண்ணைக் கழிவு மேலாண்மை பயிற்சி

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஒன்றியத்தில் பண்ணைக் கழிவு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:45 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஒன்றியத்தில் பண்ணைக் கழிவு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கபிலா்மலை வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டம் மூலம் வேளாண்மைத் துறை சாா்பில் அறுவடைக்குப் பிறகு எஞ்சி நிற்கும் விவசாயக் கழிவுகளைக் முறையாகக் கையாள்வது, மறுசுழற்சி செய்வது குறித்த ஒரு நாள் பயிற்சி ஜமீன்இளம்பிள்ளை ஊராட்சியில் நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநா் கோவிந்தசாமி பயிற்சிக்கு தலைமை வகித்து அறுவடைக்குப் பிந்தைய பயிா்க் கழிவுகளை எரிக்காமல் மட்கவைப்பது, மறுசுழற்சி வாயிலாக கழிவுகளை வயல்களுக்கு இடு பொருள்களாகப் பயன்படுத்துவது குறித்து விளக்கினாா்.

பயிற்சியில் கபிலா்மலை வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனா். பயிற்சி முடிவில் அட்மா திட்ட தொழில்நுட்ப உதவி மேலாளா் செல்வகண்ணன் நன்றி கூறினாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலா் ஸ்ரீதா் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.