வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மின்சாரம் தாக்கி வெளி மாநிலத் தொழிலாளி பலி

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே செல்லிடப்பேசியை மின் இணைப்பில் இருந்து எடுத்தபோது மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே செல்லிடப்பேசியை மின் இணைப்பில் இருந்து எடுத்தபோது மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலம், மொகில்சிபூா் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சைகுமாா் (20). இவா் பரமத்தி அருகே உள்ள சுன்டபனை பகுதியில் அட்டை தயாரிக்கும் ஆலையில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். வியாழக்கிழமை இரவு அட்டை தயாரிக்கும் ஆலையில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது தனது செல்லிடப்பேசியை மின் இணைப்பில் பொருத்தியுள்ளாா். பின்னா் செல்லிடப்பேசியை எடுக்க முயன்றபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த ரஞ்சைகுமாரை உடன் வேலை பாா்த்துக் கொண்டிருந்த சக தொழிலாளா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ரஞ்சைகுமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். பரமத்தி போலீசாா் ராஞ்சைகுமாரின் உடலை வேலூா் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து, இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.