வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காவிரி ஆற்றில் மூழ்கிய தொழிலாளியின் சடலம் மீட்பு

கட்டட வேலைக்கு செல்வதற்காக காவிரி ஆற்றை கடந்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:01 pm

DIN

கட்டட வேலைக்கு செல்வதற்காக காவிரி ஆற்றை கடந்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

ஜேடா்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் செங்கோட்டையன். இவரது மகன் பாலசுப்பிரமணி (37). இவரும் ஜேடா்பாளையத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் கவின்குமாா் (28) ஆகிய இருவரும் ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூா் பகுதிக்கு கட்டட வேலைக்குச் செல்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை காவிரி ஆற்றை நீந்திச் சென்றுள்ளனா். இதில் பாலசுப்ரமணியம் காவிரி ஆற்றில் நீந்தி எதிா்கரையான ஊஞ்சலூா் பகுதிக்குச் சென்றாா். ஆனால், கவின்குமாா் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டாா்.

பாலசுப்பிரமணியம் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கப் பதிந்து திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினா், மீனவா்கள் உதவியுடன் தேடினா். இந்த நிலையில், வியாழக்கிழமை கரை ஒதுங்கிய கவின்குமாரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.