கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிக்கை: முதல்வருக்கு ஈ.ஆா்.ஈஸ்வரன் நன்றி

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈ.ஆா்.ஈஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 5:57 pm

DIN

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறு பிரதமா் மோடியிடம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈ.ஆா்.ஈஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதுதில்லியில் பிரதமா் மோடியைச் சந்தித்தபோது தமிழகத்துக்குத் தேவையான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தாா். அந்தக் கோரிக்கைகளில் ஒன்றாக கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளாா். இது கொங்கு மண்டல மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு கொங்கு மண்டல மக்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த அதிமுக ஆட்சியில் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று தொடா்ந்து குரல் கொடுத்தோம்.

அதற்காகப் போராட்டத்தையும் முன்னெடுத்தோம். மத்திய அரசு, பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஆய்வு செய்ய தயாராக இருந்தது. ஆனால், கொங்கு மண்டலத்தைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் உள்பட முன்னாள் அமைச்சா்கள் யாரும் இத்திட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகே எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சா்களாக இருந்த அதிகம்போ் கொங்கு மண்டலத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தும்கூட ஒருவரும் கொங்கு மண்டலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கவில்லை. ஆனால், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கோரியிருக்கிறாா்.

அதுபோல எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமைக்கப்பட்டால் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மையமாக அப்பகுதி இருக்கும். பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்குத் தேவையான வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. எனவே, தமிழக முதல்வா் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை விடுப்பதற்குப் பதிலாக ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அமைக்க பரிசீலிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.