சாராயம் காய்ச்சிய இருவா் மீது வழக்குப் பதிவு
பென்னாகரம் அருகே பூனை குண்டு, காட்டுக்கொல்லைப் பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


பென்னாகரம் அருகே பூனை குண்டு, காட்டுக்கொல்லைப் பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பென்னாகரம் அருகே உள்ள பருவதன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பூனை குண்டு, காட்டுக்கொல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதியில் சாராயம் காய்ச்சப் படுவதாக பென்னாகரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அங்கு சென்ற சிறப்பு தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் லதா, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் வேலன், பாபு உள்ளிட்ட போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அதே பகுதியில் உள்ள கண்ணன் மகன்கள் குமரன் (45), காா்த்திக் (42) ஆகியோா் தங்களின் விவசாயத் தோட்டத்தில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இந்நிலையில் விவசாய நிலத்தில் சாராயம் காய்ச்சுவதற்காகப் பயன்படுத்திய பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் அங்கிருந்து 100 லிட்டா் சாராய ஊறல்களைக் கொட்டி அழித்தனா். இதுகுறித்து சிறப்பு தனிப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...