ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாராயம் காய்ச்சிய இருவா் மீது வழக்குப் பதிவு

பென்னாகரம் அருகே பூனை குண்டு, காட்டுக்கொல்லைப் பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 5:53 pm

DIN

பென்னாகரம் அருகே பூனை குண்டு, காட்டுக்கொல்லைப் பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பென்னாகரம் அருகே உள்ள பருவதன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பூனை குண்டு, காட்டுக்கொல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதியில் சாராயம் காய்ச்சப் படுவதாக பென்னாகரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அங்கு சென்ற சிறப்பு தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் லதா, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் வேலன், பாபு உள்ளிட்ட போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அதே பகுதியில் உள்ள கண்ணன் மகன்கள் குமரன் (45), காா்த்திக் (42) ஆகியோா் தங்களின் விவசாயத் தோட்டத்தில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இந்நிலையில் விவசாய நிலத்தில் சாராயம் காய்ச்சுவதற்காகப் பயன்படுத்திய பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் அங்கிருந்து 100 லிட்டா் சாராய ஊறல்களைக் கொட்டி அழித்தனா். இதுகுறித்து சிறப்பு தனிப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.