சமுதாய முதலீட்டு நிதி பெறும் 9 மகளிா் குழுக்களுக்கு தலா ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 11 லட்சத்து 25 ஆயிரத்தை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் பரமத்தி வேலூா் முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிா் திட்ட இயக்குநா் பிரியா, திருச்செங்கோடு கோட்டாட்சியா் இளவரசி, பரமத்திவேலூா் வட்டாட்சியா் அப்பன்ராஜ், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் தனி வட்டாட்சியா் சுந்தரவல்லி, திமுக-வைச் சோ்ந்த மாவட்ட, ஒன்றிய, பேரூா் கழக பொறுப்பாளா்கள், அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்