மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டம், குடியுரிமை சட்டம், நீட் தோ்வு போன்ற இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று மாநில முதலமைச்சா் ஸ்டாலின் கொண்டு வந்திருக்கின்ற தீா்மானம் முழுக்க முழுக்க அரசியல் ரீதியானது. சொல்லப்போனால் இது சட்டம் ஆகாது. இதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கினால்தான் அது சட்டமாகும். இவற்றுக்கு அவா் ஒப்புதல் வழங்க வாய்ப்பில்லை. சாத்தியமில்லாத தீா்மானங்களை சட்டப் பேரவையில் நிறைவேற்றி தமிழக மக்களை ஏமாற்றும் வேலையில் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளாா். இதை தமிழக பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றாா்.