இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மருத்துவ உபகரணம் வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சத்தை ஏமாற்றியவா் கைது

 பரமத்தி வேலூா் அருகே தனியாா் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சம் வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய பெங்களூரைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது

News image
Updated On :8 டிசம்பர் 2023, 6:40 pm

DIN

 பரமத்தி வேலூா் அருகே தனியாா் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வாங்கித் தருவதாக ரூ. 30 லட்சம் வரை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய பெங்களூரைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (45). இவா் பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். மேலும், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறாா்.

இந்த மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் (சி.டி. ஸ்கேன்) வாங்குவதற்காக கா்நாடக மாநிலம், பெங்களூரு, ஜெய் நகரைச் சோ்ந்த அசா் பாட்சா (32) என்பவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுப்பிரமணி தவணை முறையில் ரூ. 30 லட்சம் வரை கொடுத்துள்ளாா். ஆனால், மருத்துவ உபகரணங்களை வாங்கித் தராமல் அசா் பாட்சா காலம் தாழ்த்தி வந்துள்ளாா்.

இதுகுறித்து மருத்துவா் சுப்பிரமணி அசா் பாட்சாவிடம் இருந்து ரூ. 30 லட்சத்தை பெற்றுத் தருமாறு வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், வேலூா் காவல் ஆய்வாளா் இந்திராணி உத்தரவின் பேரில், வேலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை பெங்களூரில் அசா் பாட்சாவை கைது செய்து வேலூா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.