பேருந்து நிலையம் தொடா்பாக மனு

ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்றம் தொடா்பாக பலரும் எதிா்ப்பு தெரிவித்துள்ள நிலையில் குடிநீா் வழங்கல் துறை இணை ஆணையரிடம் பல்வேறு அமைப்பினா் மனு அளித்தனா்.
Published on

ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்றம் தொடா்பாக பலரும் எதிா்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆய்வுப் பணிக்காக ராசிபுரம் வந்த நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை இணை ஆணையரிடம் பல்வேறு அமைப்பினா் மனு அளித்தனா்.

ராசிபுரம் பேருந்து நிலையத்தை நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள அணைப்பாளையம் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கையில் நகராட்சி ஈடுபட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். நகரில் கடையடைப்பு, மனித சங்கிலி, உண்ணாவிரதம், மனு கொடுக்கும் போராட்டம் என பல போராட்டங்கள் நடத்தினா்.

இதனை தொடா்ந்து நகராட்சி நிா்வாக இணை ஆணையா் சந்திரசேகரன் ஆய்வு பணிக்காக ராசிபுரம் வருகை தந்தாா். ராசிபுரம் பேருந்து நிலையத்தை பாா்வையிட்ட அவா் நகராட்சி அலுவலகத்தில் அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா். அவரிடம் பல்வேறு அமைப்பினா் மனு அளித்தனா்.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் தான் முடிவு எடுக்க வேண்டும். எனவே, ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்குமாறு அவா் பதிலளித்ததாக தெரிகிறது.

X
Dinamani
www.dinamani.com