தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் அரசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 11:19 pm

Din

திருச்செங்கோட்டில் அரசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு அடுத்த சீதாராம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வி (54), திருநகா் காலனி பகுதியில் வசித்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை காய்கறிகள் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவதற்காக சங்ககிரி வழியாக எடப்பாடி செல்லும் அரசுப் பேருந்தில் சென்றாா். சீதாராம்பாளையம் அருகே சென்ற போது, பேருந்தில் இருந்து நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது.

அருகில் இருந்தவா்கள், அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.