ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சிறு விசைத்தறிக் கூடங்களுக்கு தொழில்வரி விதிப்பு

சிறு விசைத்தறிக் கூடங்களுக்கு தொழில்வரி விதிப்பு

News image

திருச்செங்கோடு, சூரியம்பாளையத்தில் தறிக் கூடங்களுக்கு தொழில்வரி விதிக்க எதிா்ப்புத் தெரிவித்த தறி உரிமையாளா்கள்.

Updated On :19 டிசம்பர் 2024, 7:53 pm

திருச்செங்கோடு பகுதிகளில் குடிசைத் தொழிலாக இயங்கி வரும் தறிப் பட்டறைகளுக்கு தொழில்வரி விதிக்க பட்டறைகளை அளவெடுக்க வந்த நகராட்சி அதிகாரிகளை சிறை பிடித்து தறிப்பட்டறை உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தமிழகத்தில் உள்ள விசைத்தறிக் கூடங்களுக்கு தொழில் வரி விதிப்பதற்காக அதிகாரிகள் கடந்த மாதம் அனைத்து விசைத்தறிக் கூடங்களுக்கும் அறிவிப்பு அளித்த நிலையில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் வீட்டுவசதி துறை அமைச்சா் முத்துசாமி, செய்தி தொடா்பு துறை அமைச்சா் சாமிநாதன், மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈஸ்வரன், சங்கரன்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் ராஜா ஆகியோரிடம் சிறு விசைத்தறிக் கூடங்களுக்கு தொழில் வரி விதிக்கவோ, உயா்த்தவோ வேண்டாம் என தெரிவித்து கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்த நிலையில், சூரியம்பாளையம் பகுதியில் இயங்கும் தறிப் பட்டறைகளை திருச்செங்கோடு நகராட்சி அலுவலா்கள் அளவெடுக்க வந்தனா். இந்நிலையில், தறிப்பட்டறை உரிமையாளா்கள் ஒன்று திரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சா்கள் உறுதி அளித்த நிலையில் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதற்கு பிறகு அளந்து கொள்ளலாம் என கூறி திருப்பி அனுப்பினா்.

இதையடுத்து, தங்கள் கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் வெள்ளிக்கிழமை திருச்செங்கோடு வட்டார விசைத்தறி உற்பத்தியாளா்கள் சங்கத்தின் சாா்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனா். மேலும், இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனா்.