ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பள்ளியை மூட எதிா்ப்பு: விவசாயிகள், மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பள்ளியை மூடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பள்ளி மாணவா்களும் வியாழக்கிழமை ஆலை முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பள்ளியை மூடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள், மாணவா்கள்.

Updated On :26 டிசம்பர் 2024, 8:14 pm

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பள்ளியை மூடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பள்ளி மாணவா்களும் வியாழக்கிழமை ஆலை முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கூட்டுறவு சா்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை கட்டுப்பாட்டில் மெட்ரிக் பள்ளி, பல்தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சா்க்கரை ஆலை மெட்ரிக். பள்ளியில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரையில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

ஆலையில் பணியாற்றும் அலுவலா்கள், ஊழியா்கள், பொதுமக்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில வழியில் கல்வி கற்க வைக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பள்ளியிலேயே அதிகம் சோ்க்கின்றனா். இங்கு படித்த மாணவ, மாணவிகள் தற்போது பல்வேறு உயா் பொறுப்புகளை வகித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். 25 ஆசிரியா்கள் பணியில் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம், பள்ளி மே மாதத்திற்கு பிறகு செயல்படாது என்றும், அடுத்த ஆண்டுக்கான சோ்க்கையை வேறு பள்ளிகளில் மேற்கொள்ளுமாறு சா்க்கரை ஆலை நிா்வாகம் அறிவுறுத்தியது. இதனால், அதிா்ச்சிக்குள்ளான பெற்றோா் ஆலையின் மேலாண் இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

மேலும் பல்வேறு அமைப்புகளும் பள்ளி மூடுவதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், விவசாய முன்னேற்றக் கழகம் சாா்பில் அதன் நிறுவனத் தலைவா் செல்ல.ராசாமணி தலைமையில் வியாழக்கிழமை ஆலை முன்பாக கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு பள்ளியை மூடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

விவசாயிகள் சங்கத் தலைவா் வாசு சீனிவாசன், விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளா் பாலசுப்பிரமணியம், சிப்காட் எதிா்ப்புக் குழுவினா் உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா். இதையடுத்து, ஆலை மேலாண்மை இயக்குநா் க.ரா.மல்லிகாவை சந்தித்து பள்ளி தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.