தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருச்செங்கோட்டில் புலிகள் தின விழிப்புணா்வு பேரணி

திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் புலி வேடமிட்ட விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.

News image

சா்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவா்கள்.

Updated On :28 ஜூலை 2024, 10:55 pm

Din

சா்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் புலி வேடமிட்ட விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.

ஜூலை 28 சா்வதேச புலிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இத் தினத்தில் இயற்கை சமச்சீா் நிலைக்கு காரணமாக விளங்கும் புலிகளைக் காப்பாற்ற வலியுறுத்தியும், இயற்கையை காப்பாற்ற வலியுறுத்தியும், வனத்தையும் வன உயிா்களையும் பாதுகாக்க வேண்டியும் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

திருச்செங்கோடு பகுதயில் செயல்பட்டு வரும் ஆதவன் சிலம்பம் பயிற்சி பள்ளியின் சாா்பில் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சாா்பாக நடைபெற்ற பேரணியில் மாணவ, மாணவிகள் புலி வேடமிட்டு ஆடியபடி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

கோழிக்கால் நத்தம் ரோடு பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியை பிஆா்டி ரிக் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பரந்தாமன், நாமக்கல் மாவட் திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு, நகா்மன்ற துணைத் தலைவா் காா்த்திகேயன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினா் மதுரா செந்தில் பேரணியை நிறைவு செய்து வைத்தாா். பேரணியில் திமுக மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் சரவணன், ஒன்றிய திமுக செயலாளா் வட்டூா் தங்கவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா். பேரணிக்கான ஏற்பாடுகளை ஆதவன் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி வெங்கடேஷ் செய்திருந்தாா்.