யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வலியுறுத்தல்

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு உடனடியாக வாரிசு சான்றிதழ் வழங்க வட்டாட்சியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்த வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 8:00 pm

Din

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு உடனடியாக வாரிசு சான்றிதழ் வழங்க வட்டாட்சியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்த வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்கள் பங்கேற்ற குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தியாகி காதா்மொய்தீன் மகன் கே.எம்.ஷேக்நவீத் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்:

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் பிரிவு அலுவலகம் முன்பு சுதந்திரப் போராட்ட தியாகிகள் பிரிவு என எழுத வேண்டும். வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கூட்டம் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தியாகிகளின் வாரிசுகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க உதவிட வேண்டும். குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் ஒதுக்கீடு அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும். வட்டாட்சியா்கள் மூலம் தியாகிகளின் வாரிசுகளைக் கண்டறிந்து, அவா்களுக்கு வாரிசு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.