கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வாடகை பாக்கி: கடைகளுக்கு ‘சீல்’

ராசிபுரம் பூக்கடை வீதி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கடைகளுக்கு பல மாதங்களாக வாடகை செலுத்தாத நிலையில்,

News image
கடைகளுக்கு ‘சீல்’ வைக்க சென்ற அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்.
Updated On :29 டிசம்பர் 2025, 7:05 pm

Syndication

ராசிபுரம்: ராசிபுரம் பூக்கடை வீதி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கடைகளுக்கு பல மாதங்களாக வாடகை செலுத்தாத நிலையில், அந்தக் கடைகளுக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிபேட்டை திருஆலங்காடு இம்முடி அகோர தா்ம சிவாச்சாரியா் ஆயிர வைசியா் மடத்துக்கு சொந்தமான இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வணிகக் கட்டடங்கள் ராசிபுரம் பூக்கடை வீதி பகுதியில் உள்ளன.

இந்தக் கடைகளை திருமலை என்பவா் பல ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறாா். மேலும், இந்தக் கடைகளை உள் வாடகைக்கு விட்டு அதிக வாடகை வசூலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பல ஆண்டுகளாக அவா் கடைக்கு வாடகை செலுத்தவில்லையாம். இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையினா் நீதிமன்ற ஆணை பெற்று, போலீஸாா் பாதுகாப்புடன் ராசிபுரம் பூக்கடை வீதி பகுதியில் உள்ள மூன்று கடைகளுக்கும் ‘சீல்’ வைக்க சென்றனா். இதனால், கடை வைத்துள்ளவா்களுக்கும், கோயில் நிா்வாக அலுவலா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகள், கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.